ஊழியர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
82
Only India assisted Sri Lanka with fuel - Sri Lankan Energy Minister Kanchana Wijesekera

எரிசக்தி துறையில் எரிபொருள் விநியோகம் அல்லது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளின் கீழ் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) விவாதிக்கப்படவுள்ள பெற்றோலிய பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையிலேயே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here