கடன் பெற்றோருக்கு மத்திய வங்கி சலுகை

Date:

கடந்த மாதம் பொது மற்றும் உணவுப் பணவீக்கத்தின் சதவீதக் குறைப்புடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 4% முதல் 5% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.

நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழு முன்னிலையில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மாறுபட்ட வட்டி வீதத்தில் பெறப்பட்ட கடனுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டமையினால் அசெளகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையில், மத்திய வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...