சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

0
61

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் அதற்கான திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் சட்டமா அதிபர் இதுவரை தனது கருத்தை தெரிவிக்காததால், அவரது ஆலோசனை கிடைத்தவுடன் அதற்கான திகதிகள் அறிவிக்கப்படும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here