பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகப் பெண்ணான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிரியமாலியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொரல்லே சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
N.S