அடுத்த ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இலக்கு!

Date:

2023ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்களின் முக்கிய கவனம் 2024 ஆம் ஆண்டாகும்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹரின் பெர்னாண்டோ, அடுத்த சில மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என்றும், பல விமான நிறுவனங்கள் இலங்கைக்குள் பறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கைக்கு இயக்கப்படும் படகுகள் மற்றும் புகையிரதங்கள் உட்பட பல புதிய சேவைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் சுமார் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடைவதே எமது உண்மையான நோக்கமாகும் என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...