இலங்கை – அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!

Date:

அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கனுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவது உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் 75 வருடங்களை நெருங்கியுள்ள நிலையில், பிளின்கன் தனது ட்விட்டர் கணக்கில், இலங்கையர்களின் கூட்டாண்மை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...