வழிபாட்டுத் தலங்களின் “புனிதத்தையும் தூய்மையையும்” பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தீர்ப்பில், நீதிபதிகள் ஆர் மகாதேவன் மற்றும் ஜே சத்யநாராயண பிரசாத் ஆகியோர், “பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க” நாடு முழுவதும் உள்ள மற்ற கோவில்களில் இதேபோன்ற தடை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினர்.