அக்குறணையில் மண்சரிவு ; இருவர் பலி!

Date:

அக்குறணை, துனுவில பிரதேசத்தில் பாறை சரிந்து வீடொன்று புதையுண்டதில் பெண் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டினுள் 5 பேர் இருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அப்பகுதி மக்களின் ஆதரவுடன் பாறை மற்றும் மண்ணை அகற்றி காயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அங்கு தாய், தந்தை, இரண்டு சிறுமிகள் மற்றும் ஆண் ஒருவர் ரூபிளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு ஜம்புகஸ்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிறுமி (18) மற்றும் சிறுவன் (16) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் போது காயமடைந்த 12 வயது சிறுமி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ரணசிங்க தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...