அக்குறணையில் மண்சரிவு ; இருவர் பலி!

Date:

அக்குறணை, துனுவில பிரதேசத்தில் பாறை சரிந்து வீடொன்று புதையுண்டதில் பெண் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டினுள் 5 பேர் இருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அப்பகுதி மக்களின் ஆதரவுடன் பாறை மற்றும் மண்ணை அகற்றி காயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அங்கு தாய், தந்தை, இரண்டு சிறுமிகள் மற்றும் ஆண் ஒருவர் ரூபிளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு ஜம்புகஸ்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிறுமி (18) மற்றும் சிறுவன் (16) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் போது காயமடைந்த 12 வயது சிறுமி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ரணசிங்க தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....