தேர்தலை நடத்த தேவையான பணம் இன்னும் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை இறுதி நிமிடத்திலாவது ஒத்திவைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இன்னமும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணம் இன்னும் திறைசேரியில் இருந்து பெறப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் திறைசேரியில் இருந்து தேவையான தொகை கிடைக்கும் என நம்புவதாகவும், தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...