யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கைது – வீடியோ

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழில் மேற்கொள்ளும் சுதந்திர தின நிகழ்வுகளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நகரின் வைத்தியசாலை வீதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை இ.போ.ச பேரூந்து நிலையம் முன்பாக  பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.

இதன்போது போராட்டம் தொடர்ந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்னம் சுகாஸ் உட்பட ஆறுபேர் பொலிசாரினால் அமத்திப் பிடித்து வாகனங்களில் வலுக் கட்டாயமாக கொண்டு சென்றனர்.

இதேநேரம் மணிக்கூட்டு வீதி சந்திக்கும் வைத்தியசாலை வீதி முன்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் ஓர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கும் பொலிசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் நகரின் மத்தியில் தொடர் பதற்றம் நிலவுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடித்து விரட்டப்பட்டதோடு வீதியில் நின்ற ஊடகவியலாளர் மோட்டார் சைக்கிலும் சேதமடைந்தது. இந்தப் போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் நீடித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....