உள்ளூராட்சி தேர்தலை நடத்த நிதி வழங்காததை எதிர்த்து உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சி மனு தாக்கல்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான தீர்ப்பின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியே ஐக்கிய மக்கள் சக்தியால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவை பிரதிவாதிகளாக பெயரிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தீர்ப்பின் மூலம் பிரதிவாதிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று அறிவிக்கும் நீதிமன்ற உத்தரவை மனு கோருகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு...

ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்...

SJB+SLPP இணைந்ததால் NPP தோல்வி

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான...

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...