எரிபொருள் இல்லை, மீண்டும் சப்புகஸ்கந்த முடங்கியது!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்தவிலுள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலும் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் எண்ணெய்க் கையிருப்பு நேற்றிரவு 8 மணி வரை மட்டுமே இருந்ததாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் நிறுத்தப்பட்டதால் தேசிய மின் வாரியமானது 100 மெகாவோட் திறனை இழந்துள்ளது.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக செயலிழந்த களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான டீசல் கையிருப்பு நேற்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...