நெடுங்கேணியை அடுத்து கொக்குத்தொடுவாயிலும் சிவன் இடிப்பு!

Date:

நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் மற்றும் முல்லைத்தீவு மணற்கேணி ஆகிய இரு சிவன் ஆலயங்கள் ஒரே காலத்தில்  உடைக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் ஆலயம் உடைக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு
மாவட்டத்தின்  எல்லைக் கிராமமான  மணற்கேணி சிவன் ஆலயமும் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எல்லைக் கிராம சிவ சின்னங்களை அழிப்பது  சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு  பௌத்த மயமாக்கத்தை முண்ணெடுக்கும் சதிச் செயலாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

வடக்கு மாகாண  எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக சைவ வழிபாட்டு அடையாளங்கள் வேண்டுமென்றே  திட்டமிட்டு அரச திணைக்களங்களால் காணாமலாக்கப்படுவதாகவே வடமாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அனைத்து விக்கிரகங்களும் உடைக்கப்பட்டதனை நேற்றைய தினம் அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு இதனை உடன உரிய தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்குரிய அடுத்த கட்ட வழிமுறை தொடர்பில் நாளை ஆராயவுள்ளனர்.

TL

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...