அடுத்த இரு வாரங்களில் கோழி இறைச்சி, முட்டை விலை குறையும்!

Date:

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறையுமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாகவே இந்தச் சலுகையை வழங்க முடிவு செய்யத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது.

நீண்ட கலந்துரையாடலை தொடர்ந்து, தேவையான கால்நடை உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் விலையை குறைக்கவும் அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியது. கால்நடை உணவுகள் குறைந்த விலையில் கிடைத்தால், அந்த நன்மை மக்களுக்கே கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...