புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் புதிய மாகாண ஆளுநர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

9 மாகாண ஆளுநர்களில் 4 பேரை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் எவரும் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என சில தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருந்தார்.

முன்னாள் பிரதம நீதியரசரின் அறிக்கையை ஆய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு அதன் பின்னர் ஆளுநர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...