உலகம் முழுவதும் அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது!

Date:

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிகரம் விருது வழங்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டுக்கும் சமூகத்திற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் தனித்துவமான பணியை ஆற்றும் பழைய மாணவர்களை பாராட்டும் வகையில் வழங்கப்படும் முதலாவது விருது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மல்வத்து தரப்பு அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க, திலக் கருணாரத்ன உள்ளிட்ட 11 பேர் இங்கு விருதுகளைப் பெற்றனர்.

முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பிலும் நவீனமயப்படுத்தலின் தேவை இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய உடனடித் தீர்வகளை கண்டறியுமாறும் கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

இந்த 10 வருட கால அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் தயாரிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு பழைய மாணவர்களிடம் மேலும் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்யாவிட்டால் கொழும்பு பல்கலைக்கழகம் அந்த விசேட செயற்பாட்டிற்கு பங்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ஜே.எம்.எஸ். பண்டார உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...