புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமால் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் உட்பட சகல பொருட்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3.5 கிலோ தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்தப் பொருட்களின் பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று (23) காலை தங்க பிஸ்கட்டுகளுடன் சுங்கக் காவலில் வைக்கப்பட்டார்.