உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு குறித்த உண்மைகளை வெளியிட்டார் மத்திய வங்கி ஆளுநர்

0
166

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியிலும் வைப்புத்தொகை பாதிக்கப்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

சிறப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க,

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு தேவையான கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 29ஆம் திகதி முதல் ஜூலை 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடப்பட்ட உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத்திற்கு போதுமான நாட்களை உருவாக்குவதே ஜூன் 30ஆம் திகதி வங்கி விடுமுறை அறிவிக்கப்படுவதற்கான முதன்மை காரணம் என ஆளுநர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here