லொத்தர் சீட்டு விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு

Date:

இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் லொத்தர் சீட்டுகளின் விலையை அதிகரிக்க தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன செயற்பட்டுள்ளன.

அதன்படி, ரூ.20 ஆக இருந்த லாட்டரி சீட்டின் புதிய விலை ரூ.40 ஆக இருக்கும். அதிக விலை காரணமாக லொத்தர் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், விலை அதிகரிப்புக்கு ஏற்ப நுகர்வோரின் வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் சந்தைப்படுத்தல் உதவி பொது முகாமையாளர் மெனுர சதுரங்க தெரிவித்தார்.

இதேவேளை, விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது கொமிஷன் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லொத்தர் விலையை அதிகரிப்பதன் காரணமாக லொத்தர் விற்பனையில் பிரச்சினை ஏற்படுவதுடன் லொத்தர் விற்பனை குறையலாம் என சங்கத்தின் தலைவர் கிருஷாந்த மரம்பகே தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...