கிழக்கு மீனவர்கள் பிரச்சினையை அமைச்சர் டக்ளஸின் நேரடி கவனத்திற்கு கொண்டுசென்ற ஆளுநர் செந்தில்

Date:

கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத டைனமைட் மீன்பிடி​  நடவடிக்கைகளை தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்த கிழக்கு ஆளுநர், கிழக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு வருகை தருமாறு  அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி மீனவர்களுடனும் கடற்படையினருடனும் பேச்சுவார்த்தை நடத்த திருகோணமலைக்கு விஜயம் செய்ய இணங்கினார். இந்த சந்திப்பின் போது கிழக்கு  மாகாண கடற் தொழில் அபிவிருத்தி குறித்தும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்படும் என ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...