புதிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்

Date:

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பக்லே விரைவில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கும் ஆலோசனைகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன், கோபால் பக்லேவை மீள நாட்டுக்கு அழைக்க இந்தியா ஆலோசித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் மாதத்துடன், அஸ்திரேலியாவுக்கான இந்தியத் உயர்ஸ்தானிகரின் சேவைக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக கோபால் பக்லேவை நியமிக்க இந்தியா உத்தேசித்துள்ளது.

அவுஸ்ரேலியாவுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதால், கோபால் பக்லேவின் நியமனம் மேலும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என இந்தியா கருதுகிறது.

இந்தியா-ஐரோப்பிய யூனியனின் விவகாரங்களை கையாண்டதில் சிறப்பு நிபுணத்துவம் மிக்கவராக சந்தோஷ் ஜா, திகழ்வதால் இலங்கையில் இந்திய மற்றும் சீன விவகாரங்களை சிறப்பாக கையாள்வார் என கருதப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...