நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் ; சிஐடி விசாரணைக்கு பணிப்பு

Date:

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தமது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் தமது ராஜினாமா கடித்தையும் கடந்த 23ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.

தாம் வழங்கிய சில தீர்ப்புகளைத் தொடர்ந்து தனக்குக் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறியே டி.சரவணராஜா நீதித்துறை பதவிகளில் இருந்த விலகுவதாக குறித்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெரும் இழுக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான பின்புலத்திலேயே இந்த விடயம் தொடர்பிலான உடனடி சிஐடி விசாரணைக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...