இஸ்ரேலுக்கு அனுமதியின்றி நுழைந்த இலங்கையர் சுட்டுக்கொலை

Date:

சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மனித கடத்தல்காரர்களிடம் 40 இலட்சம் ரூபாவை செலுத்தி இஸ்ரேலுக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபருக்கு இஸ்ரேலில் தங்குவதற்கு வீசா இல்லாத காரணத்தினால் அவர் காயமடைந்த போதிலும், அனுமதியின்றி நாட்டிற்குள் பிரவேசித்து வசிப்பதனால் எவ்வித சட்டரீதியான உரிமைகளையும் பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளமையையும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் யார் என்ற தகவலை வெளியிட நாளைய தினம் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...