யாழ். வல்வெட்டித்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Date:

யாழ்ப்பாணம், வடமராட்சி – வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன் (வயது – 63) என்பவரே நேற்று (16) காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இரவு படுக்கையில் இருந்து அவரைக் காலையில் காணாத நிலையில் தேடியபோது வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணை மேற்கொண்டார்.

சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரதே பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...