கர்ப்பிணி தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது

Date:

கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், சுமார் 500 கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கொவிட் வைரஸால் ஏற்படக்கூடிய சிக்கல் நிலையை குறைப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இம்முறை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் வசதி கருதி சில வைத்தியசாலைகளில் பரீட்சை எழுதுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....