மாநாட்டிற்கு மாற்றங்களுடன் தயாராகும் மொட்டுக் கட்சி

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய பொது மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சுகததாச உள்ளக மைதானத்தில் இது இடம்பெறவுள்ளது.

இதில் கட்சி அமைச்சர்கள், சார்பு அமைப்பு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சகோதர கட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், பொஹொட்டுவ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது குறித்தும், அந்த கூட்டணிக்கு பொருத்தமான தலைவரை தெரிவிப்பது குறித்தும் கட்சியின் சிரேஷ்டர்கள் மத்தியில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் இந்த ஆண்டு தேசிய மாநாட்டில் இது தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மாதிரி தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாகவும் புதிதாக கட்சித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...