சஜித் வெளியிட்ட 3 கடிதங்கள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி உறுதி

Date:

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அவற்றைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தி இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்துமாறு கோரி நவம்பர் 6, 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஐசிசிக்கு மூன்று கடிதங்களை அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த மூன்று கடிதங்களையும் தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாக பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“மூன்று கடிதங்களை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை பரிசீலிக்கிறேன்” என்று ஜனாதிபதி சஜித் பிரேமதாசவிடம் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...