பிரபாகரன் யார் என்பதை மறந்த வடக்கு மக்கள்; சி.வி.கே. கவலை

Date:

பத்து வருடங்களின் பின்னர் தலைவர் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலைதான் இங்கு காணப்படுகின்றது என்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி ஆரம்ப நிகழ்ச்சி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எங்கள் மக்களிடத்தில் மறதி என்கின்ற பண்பு வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பழைய விடயங்களை மறக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக இன்னும் 10 ஆண்டுகளின் பின்னர் பிரபாகரன் யார் என்றுகூட கேட்கலாம்.

மாகாண சபை செயற்பாட்டில் இருந்தபோது ஐங்கரன் விவசாய அமைச்சராக இருந்தபோது இந்த கார்த்திகை மாதத்தினை மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

எனவே மாகாண சபையின் அவைத்தலைவர் என்ற ரீதியில் அந்த தீர்மானம் நிறைவேற்றியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு.

ஐங்கரநேசன் மாத்திரம் தற்பொழுது இந்த மரநடுகையை செயற் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். இது மகிழ்ச்சிக்குரிய விடயம்” என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...