பாலியல் லட்சம் கேட்ட பொலிஸ் பரிசோதகர்

Date:

பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

வழக்கில் அவருக்கு சாதகமான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கும், வாரம் ஒரு முறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுவது தொடர்பான நீதிமன்ற கட்டளையை மாதத்திற்கு ஒரு முறை என நீடிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி உப பொலிஸ் பரிசோதகரால் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாலியல் இலஞ்சம் கோர முற்பட்ட போது, உப பொலிஸ் பரிசோதகரை கல்முனையிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...