விலை உயர்வால், பெரிய வெங்காயத்தின் தேவை வெகுவாக குறைவு

Date:

பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், நுகர்வோரின் பெரிய வெங்காயத்தின் தேவை வேகமாக குறைந்து வருவதாக வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பெரிய வெங்காயத்தின் விலை உயர்வால் அதன் தேவை படிப்படியாக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இது புறக்கோட்டை மெனிங் பொது வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் எச்.எம். உபசேனா இது குறித்து டெய்லி சிலோனுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“.. கட்டாயமாக வெங்காயம் விலையானது குறையும். இப்படித்தான் கடந்த காலங்களில் கட்டிட நிர்மாணத்துறையில் சீமெந்து விலையை உயர்த்திக் கொண்டே சென்றது. பின்னர் யாரும் சீமெந்து வாங்கவில்லை. அப்படியே விலையும் குறைந்தது. பிஸ்கட் நிறுவனங்கள் விலையை உயர்த்தியது இறுதியில் குறைந்தது. இதற்கும் நுகர்வோர் நடவடிக்கை எடுத்தால், களஞ்சியசாலைகளில் வெங்காயங்கள் அழுகும். அப்போது வெங்காய விலைகள் தானாக குறையும்..”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...