ஜனவரியில் எரிவாயு, எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Date:

ஜனவரி மாதம் வற் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளதால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரியை (பெறுமதி சேர் வரி) 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இதனால் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளில் விலைகள் பாரிய அளவில் உயர்வடையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் வற் வரி ஏற்படுத்தப்போகும் தாக்கல் குறித்து கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா, 18 வீதமாக வற் வரி உயர்த்தப்படுவதால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கும் எனக் கூறினார்.

எவ்வாறாயினும், எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான 7.5 வீதம் அறவிடப்படும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரியை நீக்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனால் பாரிய அளவில் விலைகள் உயர்வடையாது எனவும் அவர் கூறினார்.

”2020ஆம் ஆண்டுமுதல் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமது உணவு, மருத்துவம் மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கம் தொடர்ச்சியாக வரிகளையும் அதிகரித்து வருவதால் மேலும் சுமைகளை சுமக்க நேரிட்டுள்ளது” என பொது மக்கள் அதிருத்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...