தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கல்முனையிலும் இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.2019 ஆம் ஆண்டில் தட்டம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...