கந்தகாடு விடயத்தை விசாரணை செய்ய ஐவரடங்கிய குழு

Date:

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை செய்து தேவையான பரிந்துரைகளை வழங்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 03 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஐவரடங்கிய குழுவிற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு

எம்.எஸ்.பி. சூரியப்பெரும
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் காவல்துறை)

ஆர்.எஸ். ஹபு கஸ்வத்த
மேலதிக செயலாளர் (நிர்வாகம்) நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சகம்

பியுமந்தி பீரிஸ்
மேலதிக செயலாளர் (சட்டம்) நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சகம்

டி. எம் சமன் திசாநாயக்க
பாதுகாப்பு அமைச்சகத்தின் மேலதிக செயலாளர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...