பெலியத்தை ஐவர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது!

0
222

பெலியத்தையில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச்செயலுக்கு தலைமை தாங்கிய சமன் குமார என்ற 54 வயதுடைய நபரும் சந்தேகநபர்கள் வந்த 65-2615 இலக்கம் கொண்ட PEJERO MITSUBISHI ஜீப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் குற்றச்செயல் நடந்த போது வாகனத்தை செலுத்தியவர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்த குற்றச்செயலை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here