களனி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Date:

மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, களனிப் பல்கலைக்கழகத்தின் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று இரவும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன், இதனால் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டது.

போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததையடுத்து மாணவர் செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஜனாதிபதியின் பல்கலைக்கழக வருகைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...