கிண்ணியா உப்பாறில் படகு கவிழ்ந்து இருவர் பலி

Date:

மகாவலி ஆறு கடலில் விழும் கிண்ணியா உப்பாறு களப்பில் இருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் இன்று (14) சடலங்களாக மிட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த உதய் ரூபன் மற்றும் திருகோணமலை வாழையூட்டைச் சேர்ந்த புஷ்பா ராசா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு ஈச்சந்தீவு பகுதியில் இருந்து உப்பாறு பகுதிக்கு படகில் சென்றவர்களை காணவில்லை என்று கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் உயிரிழந்த இருவரையும் தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எச்.சி.கே.பெர்ணான்டோவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த இரண்டு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...