தேசிய பாதுகாப்பில் உறுதி செய்யப்படும் – ரணில்

Date:

இலங்கை கிறிஸ்தவர்கள் மிகுந்த மரியாதையுடன் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகையின் போது, ​​கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு இடமளிக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“.. இயேசு கிறிஸ்து தீமையை தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூர்ந்து ஈஸ்டர் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசுவின் துன்பம், மரணம், உயிர்த்தெழுந்த 40 நாட்களை நினைவுகூரும் கிறிஸ்தவ பக்தர்கள், ஈஸ்டர் பண்டிகையில் விரதமிருந்து ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்டு, ஒரு நாடாக நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் அதைத் தாங்கக்கூடிய ஒரு தேசமாக, அந்த மறுமைப் பயணத்தின் ஆசீர்வாதத்துடன் நாம் மீண்டும் எழ வேண்டும்.

பல்லின சமூகமாக வாழும் நாம் இன்று நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், நாட்டை சேதப்படுத்தும் எந்தவொரு சதியிலும் சிக்காமல் நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக புத்திசாலித்தனமாக எம்மை அர்ப்பணிப்பது எமது கடமையாகும்..”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...