முக்கிய தாதியர் சங்கம் எடுத்துள்ள திடீர் முடிவு

Date:

18 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பிலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியுள்ளது.

தமது சங்கம் தற்காலிகமாக இந்த போராட்டத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடுமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த 10ம் திகதி இரண்டு இடைகால தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவிற்கு தலைசாய்த்து இந்த முடிவை எடுத்ததாக சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார்.

மேலும், நோயாளர் பராமரிப்பு சேவையை அத்தியாவசியமாக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...