விஜேதாசவின் எம்பி பதவியில் கை வைக்கும் மொட்டு!

Date:

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் போதே சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராவது பாரதூரமானதொரு நிலை என்றும், அதற்கு கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று (22) தெரிவித்தார்.

அவரது கட்சி உறுப்புரிமை குறித்து இன்று முடிவு எடுக்கப்படவுள்ளதாக பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஷ மிகத் தெளிவாகத் தவறிழைத்துவிட்டதாகத் தெரிகிறதென்றும், விஜேதாச ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கட்சி உறுப்புரிமையை இழந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...