சம்பந்தனின் பூதவுடலுக்கு கிழக்கு ஆளுநர் அஞ்சலி. இறுதிக் கிரியை ஞாயிறன்று திருமலையில்

Date:

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளை ரேமன்ட் மலர்சாலையில் இன்று (02) வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலியின் பின்னர் பாராளுமன்றத்திற்கு அன்னாரது பூதவுடல் நாளை புதன் (03) கொண்டு செல்லப்படவுள்ளது.

அதன் பின்னர், இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கின்றார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...