புதிய கூட்டணி ஆதரவு யாருக்கு?

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பதை நாளை மறுநாள் (31ஆம் திகதி) வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை எனவும், தற்போது சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியொன்று காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவார். அதை 31ம் திகதி நாடு முழுவதும் அறிவிப்போம். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தற்போது வேட்பாளரை முன்வைக்க முடியாது. ஏனெனில் எமது கட்சியின் முன்னாள் தலைவர் இந்தக் கட்சியை அழித்தார்.

எனவே, நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய தொலைநோக்கு பார்வையும் அனுபவமும் கொண்ட வேட்பாளராக நாடால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவினால் தீர்மானிக்கப்படுகிறது. நாங்கள் தனி நபர்களாக முடிவுகளை எடுப்பதில்லை. நாங்கள் கட்சி என்ற ரீதியில் முடிவுகளை எடுக்கிறோம்,” என்றார் அமைச்சர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...