செந்தில் தொண்டமான் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதி

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது போல தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மாத்திரம் அன்றி அனைத்து ஏனைய பிரச்சினைகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என அவர் கூறினார்.

அதனால் மலையக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்டுக்கோப்புடன் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...