தகுதி தராதரம் பாராது ஈஸ்டர் தாக்குதலின்பிரதான சூத்திரதாரிகளுக்குத் தண்டனை – பேராயரிடம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று காலை கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு வாக்குறுதியளித்தார்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நியமிக்கப்படுகின்ற நீதிமன்றக் கட்டமைப்புக்குத் நாம் தோள் கொடுப்போம். நீதிமன்றக் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதற்காக மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாகச் செயற்படுத்துவோம்.” –  என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு வாக்குறுதியளித்தார்.

அவ்வாறே, உயர்த்து ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, இதன் பிரதான சூத்திரதாரிகளுக்குத் தகுதி தராதரம் பாராது தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...