டான் பிரசாரத்துக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Date:

சமூக செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்ளும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் எனப்படும் டான் பிரியசாத், நேற்று (20) நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமான நிலையத்தினால் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு 08.22க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 653 என்ற விமானத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விமானம் மூலம் மாலைத்தீவு செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கல்லுமுதூரையில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6ஆவது சந்தேகநபரான இவர், இதன்காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி டான் பிரியசாத்தை நாட்டை விட்டு வெளியேற விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...