அநுர அரசுடன் பேசிநிரந்தரமான தீர்வைபெற்றுத் தருவோம்- தமிழ் மக்களின் ஆணையைக் கோருகின்றார் மனோ

Date:

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்களும் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்வோம். நாங்கள் அனைவரும் கரம் கோர்த்துக்கொண்டு சிநேகபூர்வமான முறையில் அநுர அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...