சுற்றுலா வந்த தென்னிலங்கை பெண் யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி பலி

0
294

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கம்பஹாவைச் சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடி புஸ்பராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த 9ஆம் திகதி சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். மறுநாள் அவர்கள் காங்கேசன்துறை நோக்கி தமது காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை காரும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதில் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு தெல்லிப்பழை  வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு மேற்படி பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here