சுற்றுலா வந்த தென்னிலங்கை பெண் யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி பலி

Date:

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கம்பஹாவைச் சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடி புஸ்பராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த 9ஆம் திகதி சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். மறுநாள் அவர்கள் காங்கேசன்துறை நோக்கி தமது காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை காரும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதில் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு தெல்லிப்பழை  வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு மேற்படி பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...