இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 11 பேருக்கு2 வருடங்கள் சிறைத்தண்டனை

Date:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 11 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய வேளை கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 இந்திய மீனவர்களில் 11 பேருக்கே 2 வருடங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டபோதும் 10 மீனவர்கள் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டிய குற்றத்துக்காகவும், படகு உரிமையாளர் ஒருவருமாகவே 11 பேருக்கும் 2 வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நால்வரும் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டணையுடன் விடுவிக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர...

லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.உடல் நலக்...