ரவியின் செயலால் கடும் கோபத்தில் ரணில்!!

Date:

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு கட்சியின் செயலாளர் ஊடாக ரவி கருணாநாயக்கவின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடும் கோபமடைந்துள்ளதாக முன்னர் செய்தியொன்றில் நாம் தெரிவித்திருந்தோம்.

இந்தப் பின்னணியில்தான் ரணில் விக்கிரமசிங்க இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை சாகல ரத்நாயக்கவுக்கு வழங்க கடுமையாக முயற்சித்து வந்தார்.

விக்கிரமசிங்க இந்த இரண்டு எம்.பி பதவிகளுக்கான நியமனங்களை முடிந்தவரை தாமதப்படுத்த விரும்பியதுடன் ரவி கருணாநாயக்க தனது பெயரை கட்சியின் செயலாளர் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பினார்.

இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் ரொனால்ட் சி. பெரேராவைத் தொடர்பு கொண்டு, இருவருக்கும் இந்த ஆசனங்கள் சொந்தமாக இருப்பதால், ஆசனங்களைப் பெறுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரவி கருணாநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் அளவுக்கு ரணில் விக்கிரமசிங்க கோபமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இன்று (நவம்பர் 18) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...