யாழ். மாவட்டத்தில் 2 ஆயிரத்து 294 பேர்வெள்ளத்தால் பாதிப்பு

Date:

யாழ். மாவட்டத்தில் 2 ஆயிரத்து 294 பேர்வெள்ளத்தால் பாதிப்புயாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 641 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 494 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்>’ – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...