இன்றைய தினமும் மோசமான வானிலை

Date:

வடகிழக்கு கரையோரத்தில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இதேவேளை தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது. வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் 21 மாவட்டங்களில் 330,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களனி, நில்வலா, மகாவலி, யான் ஓயா, மா ஓயா, மல்வத்து ஓயா, மஹா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...